இலங்கைக்கு பெட்ரோல் கப்பல் வருவதில் தாமதம்!: எரிசக்தி அமைச்சர்

Date:

இலங்கைக்கு இன்றைய தினம் அதிகாலை வரவிருந்த 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் ஒரு நாள் தாமதமாகவே வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் வரையறுக்கப்பட்ட அளவு பெற்றோல் விநியோகிக்கப்படும் என அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சூப்பர் டீசலின் வரையறுக்கப்பட்ட முறையில் விநியோகிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று ஜூன் 23 அதிகாலையில் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் வந்து சேரும் என   அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அதன் வருகை இப்போது தாமதமாகியுள்ளது.  எனவே ஜூன் 24 வெள்ளிக்கிழமை கொழும்பில் பெட்ரோல் கப்பல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் கொழும்பில் உள்ள அனைத்து முக்கிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டாலும், எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளை காணமுடிந்தது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...