இலங்கையில் இன்று துல்ஹஜ் தலைபிறை தென்பட்டது: ஞாயிறு (10) ஹஜ்ஜுப் பெருநாள்!

Date:

துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இன்று நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை, வெள்ளிக்கிழமை இரவு ஹிஜ்ரி 1443 துல் ஹிஜ்ஜஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், நாட்டின் சில பகுதிகளில் துல் ஹஜ் மாத தலைப்பிறை இன்று (30) தென்பட்டுள்ளது.

இதன்போது, நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்தது.

அதன்படி, இலங்கையில் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளைக் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...