இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கு நீதிமன்றத்தினால் 14 நாட்களுக்கு தடையுத்தரவு

Date:

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோர், எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு உடனடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்குமாறு மாவட்ட நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை விசாரித்த மாவட்ட நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

எனினும், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் பல்வேறு விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையைடுத்து, குறித்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்படத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...