‘இல்லை’ என்று சொன்னாலும் பெற்றோலுக்கு மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்: ‘பதவிய பகுதியில் 10 நாட்களாக எரிபொருள் வரவில்லை’

Date:

பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக பல நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை காணப்படுகின்றது.

சிலர் நீண்ட நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர். எனினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து டீசலை பெற்றுக்கொள்ள வேண்டாம் என தனியார் பஸ் சாரதிகளிடம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக தொடர்ச்சியாக டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பதவிய பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 10 நாட்களாக எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.

அதேநேரம், டீசல் மற்றும் பெற்றோலுக்கு பணம் செலுத்தப்பட்ட போதிலும் டீசல் மாத்திரமே பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை மெதிரிகிரிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக எட்டு நாட்களாக வரிசையில் நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஊழியர் ஒருவர் கூறுகையில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த பாதுகாவலர் ஒருவர் வீட்டிற்கு செல்வதற்கு எரிபொருள் கொடுத்துள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...