ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பேராயர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு!

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு காரணமான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறான ரிட் உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த மனுவில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.கே. ஹெட்டியாராச்சி, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசில குமார மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த நவரத்ன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் குறைந்தது 271 பேர் கொல்லப்பட்டனர். மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமித்ததாக கர்தினால் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை 2021 ஜனவரி 31ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததாக அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளின்படி, புலனாய்வுத் துறை, காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதற்குக் காரணமான உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தாக்குதலைத் தடுக்கத் தவறிய மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு எதிராக பிரதிவாதிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கர்தினால் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு ரிட் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...