எரிபொருளை கோரி பஞ்சிகாவத்தை மக்கள் 2ஆவது நாளாக போராட்டம்: நாடு எதிர்பார்த்து காத்திருந்த பெட்ரோல் கப்பல் வந்தடைந்தது!

Date:

எரிபொருளை கோரி பஞ்சிகாவத்தை பிரதேச மக்கள் இரண்டாவது நாளாக இன்று (24) காலை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல நாட்களாக பஞ்சிகாவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் கிடைக்காததால் மக்கள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர்.

பஞ்சிகாவத்தை பிரதேச மக்கள் நேற்று (23) காலை எரிபொருளுக்காக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இன்று 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் கப்பல் இலங்கைக்கு வரும் என நம்பப்படுகிறது.

இந்த பெட்ரோல் கப்பல் பல நாட்களாக நாட்டில் வரிசைகளில் முக்கிய நம்பிக்கையாக உள்ளது. நேற்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் கையிருப்பு விநியோகம் செய்யப்பட்ட போதிலும் சில பகுதிகளுக்கு இதுவரை பெற்றோல் கிடைக்கவில்லை.

பெறப்பட்ட குறைந்த அளவு பெற்றோல் கூட வரிசையில் நிற்கும் மக்களுக்கு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சுகாதார பிரிவினருக்கும் ஏனைய வாகனங்களுக்கும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை களுபோவில வைத்தியசாலைக்கு முன்பாகவும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...