எரிபொருள் நிலையங்களில் ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு குறைந்தபட்ச அதிகாரம்!

Date:

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே கட்டுக்கடங்காத வன்முறைகளை கட்டுப்படுத்தும் அதே வேளையில் குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சு இலங்கை பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதற்கமைய எரிபொருள நிலையங்களில் நேற்று (ஜூன் 18) இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு விஸ்வமடுவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து எரிபொருளை பெறுகின்றனர்.

அதுருகிரிய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அதிருப்தியடைந்த மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாத வகையில் பொலிசார் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் எரிபொருள் குறிப்பாக பெற்றோல்இ சூப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கிட்டத்தட்ட தீர்ந்துவிட்டதால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...