கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட்டுக்கு, இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்!

Date:

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கட்டார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல்தானி புதன்கிழமை (ஜூன் 08) தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அழைப்பின் போது இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை இரு தலைவர்களும் மீளாய்வு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களின் உரையாடலின் கவனம் பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத் துறைகள் மற்றும் பொதுவான ஆர்வமுள்ள பல பிரச்சினைகள் குறித்தும் இருந்தன

இதற்கிடையில், கட்டார் நாட்டுக்கான தூதர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல் சொரூர் அவர்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை வெளிவிவகார அமைச்சில் ஜூன் 06 அன்று சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் பின்னடைவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தூதுவர் அல் சொரூரிடம் விளக்கினார்.

கட்டார் தூதுவர், இலங்கை-கட்டார் இருதரப்பு உறவுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இத்தருணத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...