சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கும் : பிரதமர் ரணில்

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் நாட்டின் நிலவும் பொருளாதார நிலைமை குறித்து நேற்றையதினம் கலந்துரையாடியதாக பிரதமரின் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இதன்போது, ஊழியர் மட்ட உடன்படிக்கைகளை இறுதி செய்வதற்கு பணியாளர் குழுவொன்றை உடனடியாக இலங்கைக்கு அனுப்புமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாட்டை எட்டியதன் பேரில் நிதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்ஜிங் நிதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை முடிப்பதை நம்பியிருப்பதாக பிரதமர் விளக்கினார்.

இந்த இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க தனது விருப்பத்தை முகாமைத்துவ பணிப்பாளர் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...