ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக்கூட்டம் கண்டியில்..!

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுக்கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (18) கண்டி – கட்டுக்கலை ஜும்ஆ மஸ்ஜிதில் இடம்பெறவுள்ளது.

இதன்போது அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாக சபை தெரிவு நடைபெறவுள்ளது.

இந்த பொதுக்கூட்டத்திற்குசுமார் 8,000 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் கிளைகளின் பிரதிநிதிகள் மாத்திரமே அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வருகின்றார்.

இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தின் போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் பதவியில் மாற்றமொன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை...

நாட்டின் சில பகுதிகளில் சூரியன் உச்சம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...