தற்கொலை முயற்சியில் குழந்தையை களனி ஆற்றில் வீசிய தாய்!

Date:

தனது குழந்தையை களனி ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற 43 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது 05 வயது மகனை வத்தளை கதிரான பாலத்தில் இருந்து களனி ஆற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றபோது அப்பகுதி மக்களால் தடுத்து வைக்கப்பட்டு பின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை காணாமல் போன குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது. களனி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் காணாமல் போன ஐந்து வயது குழந்தையை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

42 வயதான தாய் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று வியாழன் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...