தற்கொலை முயற்சியில் குழந்தையை களனி ஆற்றில் வீசிய தாய்!

Date:

தனது குழந்தையை களனி ஆற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற 43 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தனது 05 வயது மகனை வத்தளை கதிரான பாலத்தில் இருந்து களனி ஆற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றபோது அப்பகுதி மக்களால் தடுத்து வைக்கப்பட்டு பின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை காணாமல் போன குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது. களனி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் காணாமல் போன ஐந்து வயது குழந்தையை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

42 வயதான தாய் வத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று வியாழன் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...