தலிபான்கள் மற்றும் இந்தியா தூதுக்குழுவினா் சந்திப்பு: இது குறித்து கருத்து தொிவித்த பாகிஸ்தான்!

Date:

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டு வரும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிட இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஜே.பி. சிங் தலைமையிலான குழு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு பயணமானது.

இது குறித்து கருத்து தொிவித்த பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடா்பாளா் அசிம் இப்திகார் கூறுகையில், மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் கடந்த நவம்பா் மாதம் அனுமதி அளித்தது. “அமைதியான, நிலையான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானைத்தான் நாங்கள் விரும்புகிறோம்”.

நிலையான மற்றும் வளமான ஆப்கானிஸ்தானில் எந்தவொரு நாடும் பாதிப்பை ஏற்படுத்துவதை விரும்பவில்லை என அவா் தொிவித்தாா்.

குறித்த சந்திப்பில் இந்தியக் குழுவினா் தலிபானின் மூத்த தலைவா்களை சந்தித்து பேசியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...