திஸ்ஸமஹாராம பகுதியில் விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Date:

திஸ்ஸமஹாராம பிரதேச செயலகத்தில் இன்று (18) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொண்டார்.

இதன்போது அமைச்சர் அவ்விடத்தை விட்டு வெளியேறியதும் பிரதேச செயலகங்களுக்கு முன்பாக நின்றிருந்த மக்கள் குழுவினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் குழுவொன்றும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரவில கால்நடைச் சபைக்கு சொந்தமான பண்ணைக்கு விஜயம் செய்ய அவர் செல்லவிருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதேவேளை குறித்த இடத்திற்கு வருகை தந்த திஸ்ஸமஹாராம பொலிஸார் மற்றும் வீரவில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் கட்டுப்படுத்தப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடுமையான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...