‘நாட்டில் தேவையான மருந்துகள் இல்லை, மக்கள் பாதுகாப்பாக இருங்கள்’: மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Date:

மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கசங்கத்தின் உறுப்பினர் டாக்டர் பிரசன்ன கொலம்பகே தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்க காரியாலயத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்சமயம் நாட்டில் மருந்துப் பொருட்கள் இருப்பு போதுமானதாக இல்லை எனவும், கிடைக்கும் மருந்துகளின் கையிருப்பு குறைவடைந்துள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.

வேலை, வீட்டு வேலைகள் போன்றவற்றின் போது விபத்து ஏற்படும் பட்சத்தில், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் சிரமம் ஏற்படும் என்றும் மருத்துவர் கூறினார்.

மேலும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நேரத்தில் மருந்துகளை கவனித்து குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...