பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு!

Date:

கடந்த வாரம் மூடப்பட்ட பாடசாலைகள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களுக்கு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த நாட்களில் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பாடசாலை கல்வி நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவுகள் எத்தனை நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்தந்த பாடசாலை அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் கடந்த வாரம் போலவே அடுத்த வாரமும் இடம்பெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
போக்குவரத்து சிரமம் உள்ள ஆசிரியர்கள் இருந்தால், அதிபர்கள் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.
மேலும் போக்குவரத்து சிரமம் காரணமாக பாடசாலைகளுக்கு வராத ஆசிரியர்களுக்கு இந்த நாள் தனியார் விடுமுறையாக கருதப்படாது என்றும் கல்வி அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...