பாடசாலை மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

Date:

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பாடசாலை பஸ் சேவையை நாளை (15) முதல் ஆரம்பிக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் கீழ் கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக பாடசாலை பஸ் சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த பாடசாலை பஸ் சேவைகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து கெஸ்பேவ, கோட்டை, மொரட்டுவ, தொட்டலங்க, நாரஹேன்பிட்டி, பதுரலிய, மத்துகம, ஹொரணை, களுத்துறை, அளுத்கம, ஹோமாகம, தெல்கந்த, நாரஹேன்பிட்டி, ஹோமாகம, மஹாலேவ, வீதியால் இயங்கும்.

மேலும், சாதாரண பஸ் கட்டணத்தின் கீழ் இயங்கும் புதிய பாடசாலை பஸ் சேவைகளுக்கு தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படும் என பொது அத்தியட்சகர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய மேல்மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவவின் மேற்பார்வையின் கீழ் இந்த புதிய பாடசாலை பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...