பிரதமர் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: வஜிர

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்று இலங்கையில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், அப்பணி வெற்றி பெறும் வரை பொறுமை காக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நேரத்தில் பிரதமர் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களும் ஆதரவளிக்க வேண்டுமெனவும், பதற்றமின்றி நிதானமாக செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண முடியும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாடு எட்டப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...