புத்தளம் வணாத்தவில்லு வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு 3 வருடங்கள் சிறையில் இருந்த இருவருக்கு பிணை!

Date:

புத்தளம் வணாத்தவில்லு லெக்ட்டோ தோட்ட வெடிபொருட்கள் மீட்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு அதிகமாக சிறைப்படுத்த பட்டிருந்த புத்தளத்தை சேர்ந்த இருவருக்கு இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டது.

இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் புத்தளம் மேல் நீதிமன்றில் இடம் பெற்றுவருகின்ற நிலையில் சந்தேகநபர்களான முபீஸ் மற்றும் ஹமாஸ் ஆகியோர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப், முஹம்மது சஜாத் மற்றும் மதீஹா அப்பாஸ் ஆகியோர் தமது காட்ச்சிக்காரர்களுக்கு பிணை கோரும் பத்திரத்தினி சமர்பித்திருந்தனர்.

இதனை பரிசீலனை செய்வதற்கன காலத்தை மூவரடங்கிய நீதவான்கள் வேண்டியிருந்தனர். இதனடிப்படையிலான தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது.

இன்று மன்றில் மகர சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது இவ்ரகளுக்கான பிணை வழங்கப்பட்டது.மேற்படி சந்தேக நபர்களுக்கு தலா ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா ரொக்கப் பிணனையும், தலா இருபது லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பினைகளும், அத்துடன் மாதத்தில் முதல் சனிக்கிழமை கொழும்பு குற்றத்தடுப்பு திணைக்களத்திலும் ஏனைய இரு சனிக்கிழமை புத்தளம் காவல் துறையிலும் கையொப்பம் இடுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மீண்டும் வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இடம்பெறும்.

(தகவல் : இர்ஷாத் ரஹமதுல்லா-புத்தளம்)

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....