பேருவளையில் வீட்டுத் தோட்ட வழிகாட்டல்களும், மரக்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வும்!

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பேருவளை மன்றமும், ரம்யா லங்கா நிறுவனமும் இணைந்து ‘உதலு சவிய’ திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்ட உருவாக்கத்திற்கான வழிகாட்டல்களும், மரக்கன்றுகள் விநியோகிக்கும் அங்குராப்பண நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வு பேருவளை, அம்பேபிடிய, அஸாபிர் ஜன்னாஹ் அல்குர்ஆன் பாடசாலையில் நடைபெற்றது.

இதில் பேருவளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து பாடசாலைகள், பேருவளை அஸாபிர் ஜன்னாஹ் அல்குர்ஆன் பாடசாலை மற்றும் இக்ராஃ தொழில்நுட்பக் கல்லூரியிலும் இத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ள இந்நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுபதிகாரிகள், பேருவளை குருந்துவத்தை விகாரை பிரதானிகள் ஊர்பிரமுகர்கள் மற்றும் பேருவளை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆண், பெண் ஊழியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...