‘மின்சாரத் திருத்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது’

Date:

இலங்கை மின்சாரம் (திருத்தம்) சட்டமூலம் இன்று அமுலுக்கு வந்தது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இலங்கை மின்சாரம் (திருத்தம்) சட்டமூலத்திற்கான சத்தியக் கடதாசியை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து அமுலுக்கு வரும் வகையில் கையெழுத்திட்டார்.

இலங்கை மின்சாரம் திருத்தம் சட்டமூலம் கடந்த 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையின்றி நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா ஒரு நபர் மின் உற்பத்தி உரிமத்திற்கு விண்ணப்பிக்க தகுதியளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 25 மெகாவாட்டுக்கு மேல் மின்சாரம் தயாரிக்க உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நபர் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, உற்பத்தி திறனில் தடையின்றி யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.

இதேவேளை சபாநாயகரின் சான்றிதழைப் பதிவுசெய்து 2022 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தின் படி இலங்கை மின்சாரம் (திருத்தம்) சட்டம் இலங்கையின் சட்ட அமைப்பில் இணைக்கப்படும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...