முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Date:

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு குழந்தைகளை அனுமதிப்பது தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய  2023 ஆம் ஆண்டு முதல் குறித்த சுற்றறிக்கையானது அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...