முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Date:

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு குழந்தைகளை அனுமதிப்பது தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய  2023 ஆம் ஆண்டு முதல் குறித்த சுற்றறிக்கையானது அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...