மே 9 வன்முறைச் சம்பவத்துக்கு இன்றுடன் ஒரு மாதம்: தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தற்போது போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டா கோ கம மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள ‘மைனா கோ கம’ ஆகிய இரண்டு அமைதியான போராட்டத் தளங்களில் ‘அரச அனுசரணையுடன் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்துக்கு இன்றுடன் (ஜுன் 9) ஒரு மாதத்தைக் குறிக்கிறது.

அதற்கமைய இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்தப் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ, தேஷபந்து தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இரவு 8 மணிக்குள் கோட்டை நீதவான் முன்னிலையில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டார், மேலும் அவர்; தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...