வடக்கு- கிழக்கில் உள்ள வன நிலங்கள் பயிர்ச்செய்கைக்காக கொடுக்கப்பட்டுள்ளன!

Date:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை மீண்டும் விவசாய மக்களுக்கு வழங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வன திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வயல் நிலங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் கமநல ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

வனப்பாதுகாப்பிற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை இம்முறை மற்றும் எதிர்வரும் பருவ காலத்தில் விவசாயம் செய்யக்கூடிய வகையில் விவசாயிகளுக்கு வழங்குவதை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...