வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் 5 வாரங்களுக்குள் பாராளுமன்றில் விவாதிக்கப்படும்!

Date:

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை வர்த்தமானி அறிவித்து ஐந்து வாரங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த வரைவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு 07 நாட்களுக்குப் பின்னர் அதனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.

இதேவேளை, எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என தான் நம்புவதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...