வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் 5 வாரங்களுக்குள் பாராளுமன்றில் விவாதிக்கப்படும்!

Date:

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை வர்த்தமானி அறிவித்து ஐந்து வாரங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியும் என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த வரைவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு 07 நாட்களுக்குப் பின்னர் அதனை நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.

இதேவேளை, எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என தான் நம்புவதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...