விவசாயத்துறை அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறை ரத்து!

Date:

யூரியா உர விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் ஜூலை 06 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் ஜூலை 06ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

கையிருப்பில் உள்ள உரங்களை விவசாய மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (24) விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்குமாரவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், யூரியா உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள கமநல அபிவிருத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...