2500 மெட்ரிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு இலங்கை வந்தடைந்தன: லஃப்ஸ் எரிவாயு விநியோகமும் அடுத்த வாரம் தொடங்கும்!

Date:

லிட்ரோவினால் இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 2500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்தன.

இந்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டர்கள் இறக்கப்பட்ட பின்னர் எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் மீண்டும் தொடங்க முடியும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இதேவேளை மூன்று மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த லாஃப் சமையல் எரிவாயுவின் உள்நாட்டு விநியோகம் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் இலங்கை வந்துள்ளதுடன், பரிசோதனை நிறைவடைந்தவுடன் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.

Popular

More like this
Related

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...

பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ம் திகதி முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து...

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பிரச்சினை: அமைச்சர் விஜேபால

சிறைச்சாலைகளில் நேற்றிரவு முதல் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொதுமக்கள்...