அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல்!

Date:

பத்தரமுல்ல பெலவத்தையில் கல்வி அமைச்சுக்கு எதிரே அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது மாணவர்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி கல்வி அமைச்சுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

இவ்வேளையில் அங்கிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் மாணவர்கள் நோக்கி கண்ணீர்ப் புகைத் தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...