அனைவரும் ஆதரவளித்தால் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்லலாம்: வஜிர

Date:

நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் ஆதரவளித்தால் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் நாட்டை சாதகமான பாதையில் கொண்டு செல்ல முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

தற்போது 20 மில்லியன் மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அந்த நோயாளர்களை கவனிக்க வந்தவர்தான் நிபுணத்துவ மருத்துவர் பிரதமர்.

ரணில் விக்கிரமசிங்கவை சபிக்காமல் அனைவரின் ஆசியும் கிடைத்தால்! இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கொள்கைப் பிரகடனம் இன்றும் பூரண உண்மையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கும் கொள்கைப் பிரகடனத்தை மக்கள் செவிமடுத்திருந்தால் இன்று நாடு இவ்வாறான அவலத்தை எதிர்நோக்கியிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...