அரச ஊழியர்களின் விடுமுறையால் கல்வித்துறைக்கு பாதிப்பு இல்லை: கல்வி அமைச்சர்

Date:

அரச உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் இ.போ.ச பஸ்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

எனினும் சில பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் இன்னும் உள்ளன. இது தொடர்பில் விரைவில் கலந்துரையாடி வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...