இந்த வாரம் பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

Date:

நகர்ப்புற பாடசாலைகளை இந்த வாரமும் இடம்பெறாது என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் மேல் மாகாணத்தில் கொழும்பு பகுதி மற்றும் அருகிலுள்ள நகரங்களிலும் மற்றும் ஏனைய மாகாணங்களின் முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகள் நடைபெறாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலை வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு முன்னதாக அதிபர்களுக்கு அறிவித்திருந்தது.

போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நாட்களில் பாடசாலைக்கு வராத ஆசிரியர்களுக்கு தனியார் விடுமுறை தினங்களாக பதிவு செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த வாரத்தில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்து அதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துவார்கள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஜூன் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டால், இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பருவப் பரீட்சைகள் நடத்தப்படும்.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...