இன்று இரவு முதல் அரிசி கட்டுப்பாட்டு விலைக்கே விற்க வேண்டும்: டட்லி சிறிசேன

Date:

அனைத்து அரிசி வகைகளும் அரச அங்கீகாரம் பெற்ற கட்டுப்பாட்டு விலைக்கு இன்று இரவு முதல் விற்பனை செய்யப்பட வேண்டுமென அரிசி ஆலைகள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, அனைத்து அரிசி ஆலைகளும் தங்களது இருப்புகளை கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அதேநேரம் அரிசி சில்லறை விற்பனையாளர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாட்டு விலைக்குக் குறைவான கையிருப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் இன்று முதல் அரிசியின் சந்தை விலையை பேணுவதற்கு மக்களே முழுப்பொறுப்பேற்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுப்படுத்தப்பட்ட விலையின் கீழ் அரிசியைக் கோருவதற்கு மக்களுக்கு அதிகாரம் உள்ளது எனவும், அவ்வாறு வழங்கப்படாவிடின் கிராமசேவக அல்லது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 2, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை பின்வருமாறு விதித்துள்ளது.

வெள்ளை/ மற்றும் சிவப்பு நாடு – வேகவைத்த, உள்ளூர் அரிசி ரூ. ஒரு கிலோ 220. வெள்ளை/ சிவப்பு சம்பா – வேகவைத்த – உள்ளூர் அரிசி ஒரு கிலோவுக்கு ரூ. 230. (கீரி சம்பாவைத் தவிர)

கீரி சம்பா (உள்ளூர்) ஒரு கிலோ ரூ.  260 ஆகும்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...