இன்று நள்ளிரவு முதல் தொலைபேசி, இணையக் கட்டணங்கள் உயர்வு!

Date:

இன்று (ஜூன் 3) நள்ளிரவு முதல் வட், மற்றும் தொலைத்தொடர்பு வரிகள் அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பிரதிப் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதற்கு ஏற்றாற் போல் தொலைபேசி கட்டணங்களும் உயர்வடையவுள்ளன.

அதன்படி தொலைத்தொடர்பு வரி 11.25வீதத்தில் 15வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், மதிப்பு கூட்டு வரி (வட்) 8 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், தொலைபேசி கட்டணமும் உயரும் என்றார்.

அதன்படி, மொத்த வரி விகிதத்தில் 22.6 வீதமாக இருந்த வரி விகிதம் 31.43வீதமாக உயரும் என்றார்.

இணைய சேவைக் கட்டணங்கள் மீதான பெறுமதி சேர் வரி அதிகரிப்பும் திருத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 10.2வீதமாக முதல் 14.29வீதம் வரை வரி உயரும் என்றார்.

நாட்டிலுள்ள முன்னணி தொலைபேசி சேவை வழங்குனர்கள் உரிய வரித் திருத்தங்களுக்கு அமைவாக தமது அழைப்புக் கட்டணங்களையும் இணைய சேவைக் கட்டணங்களையும் அதிகரிப்பதுடன், இது தொடர்பில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...