இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினருக்கு நீதிமன்றத்தினால் 14 நாட்களுக்கு தடையுத்தரவு

Date:

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் இந்துவர, செயலாளர் தம்மிக்க விமலரத்ன ஆகியோர், எதிர்வரும் 14 நாட்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு உடனடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்குமாறு மாவட்ட நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை விசாரித்த மாவட்ட நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது.

எனினும், இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் பல்வேறு விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையைடுத்து, குறித்த பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டமை குறிப்படத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...