கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி எழுதிய ‘தஸவ்வுப்’ (இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம்) என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வு நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் தலைமை தாங்கவுள்ளதுடன் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப்பீடம் தென்கிழக்குப்பல்கலைக்கழகம் (ஒலுவில்) பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர் நூல் மதீப்பீடு செய்யவுள்ளார்.
இதேவேளை இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை பேஸ்புக் நேரடி ஒளிபரப்பின் மூலமாக பார்க்க முடியும். (https://www.facebook.com/naleemiah.institute)