‘கோட்டா – ரணில் சாபத்திற்கு முடிவு கட்டுவோம்’: கொழும்பில் சஜித் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

Date:

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்று வருகின்றது.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு உடனடி தீர்வு கோரி ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் உடடினயாக பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

‘கோட்டா – ரணில் சாபத்திற்கு முடிவு கட்டுவோம’ என்ற தொனிப்பொருளிலே இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி செயலகத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்வதற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...