இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான பிரதிநிதிகள் குழு இன்று (20) காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் இலங்கையில் சுமார் ஒரு வார காலம் தங்கியிருந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த பேச்சுவார்த்தை தற்போது பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.