ஜனாதிபதி அலுவலகம் அருகே பதற்றமான நிலை: போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது!

Date:

இன்று காலை கொழும்பில் உள்ள நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிசார் கைது செய்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் ‘கொட்டா கோ கம’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலகத்தின் மேலும் இரண்டு நுழைவாயில்களை மறித்ததன் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, லோட்டஸ் சாலையை வாகன போக்குவரத்துக்கு திறந்துவிட்டனர்.

இதேவேளை, நிதி அமைச்சின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கலைந்து சென்றுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...