திங்கட்கிழமை முதல் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம்!

Date:

நாளை (27) முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சமாளிக்கும் வரை நாட்டில் எரிபொருள் வரிசையில் டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிபொருள் நிலைமையை மேம்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய நேற்று இரவு பாதுகாப்பு சபை கூடியதாகவும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முப்படையினரையும் பொலிஸாரையும் ஈடுபடுத்தி வரிசையில் நிற்கும் அனைவருக்கும் டோக்கன் வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். .

மேலும், குறித்த டோக்கன் குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பிரத்தியேகமாக இருக்கும் எனவும், வரிசையில் காத்திருப்பவரின் தொலைபேசி இலக்கமும் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்களில் புதிய எரிபொருள் ஏற்றுமதி கிடைக்கும் வரை எங்களால் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் எரிபொருளை வழங்க முடியாது.

குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் கிடைத்தவுடன், பெறப்பட்ட அளவின் அடிப்படையில் டோக்கன் வைத்திருப்பவரை அழைத்து தெரிவிப்பதே திட்டம் என்று அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...