திஸ்ஸமஹாராம பகுதியில் விவசாய அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Date:

திஸ்ஸமஹாராம பிரதேச செயலகத்தில் இன்று (18) காலை நடைபெற்ற கூட்டமொன்றில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொண்டார்.

இதன்போது அமைச்சர் அவ்விடத்தை விட்டு வெளியேறியதும் பிரதேச செயலகங்களுக்கு முன்பாக நின்றிருந்த மக்கள் குழுவினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் குழுவொன்றும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீரவில கால்நடைச் சபைக்கு சொந்தமான பண்ணைக்கு விஜயம் செய்ய அவர் செல்லவிருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதேவேளை குறித்த இடத்திற்கு வருகை தந்த திஸ்ஸமஹாராம பொலிஸார் மற்றும் வீரவில பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் கட்டுப்படுத்தப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடுமையான பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...