பாடசாலை மாணவர்களுக்கு புதிய பேருந்து சேவை ஆரம்பம்!

Date:

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக புதிய பாடசாலை பஸ் சேவையை நாளை (15) முதல் ஆரம்பிக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் கீழ் கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக பாடசாலை பஸ் சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளதாக மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பொது முகாமையாளர் ஜகத் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த பாடசாலை பஸ் சேவைகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் இருந்து கெஸ்பேவ, கோட்டை, மொரட்டுவ, தொட்டலங்க, நாரஹேன்பிட்டி, பதுரலிய, மத்துகம, ஹொரணை, களுத்துறை, அளுத்கம, ஹோமாகம, தெல்கந்த, நாரஹேன்பிட்டி, ஹோமாகம, மஹாலேவ, வீதியால் இயங்கும்.

மேலும், சாதாரண பஸ் கட்டணத்தின் கீழ் இயங்கும் புதிய பாடசாலை பஸ் சேவைகளுக்கு தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படும் என பொது அத்தியட்சகர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய மேல்மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவவின் மேற்பார்வையின் கீழ் இந்த புதிய பாடசாலை பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...