முகக்கவசம் இனி அவசியமில்லை – அரசாங்கம்: அவசியம் என்கிறது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Date:

முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையுடன் தாம் உடன்படமாட்டோம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துதெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில் வரப்படவில்லை. இன்றும் பல்வேறு நாடுகளில் மீண்டும் வைரஸ் தாக்கத்திற்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந் நிலையில்
கொரோனா தொற்றை ஒழிக்காமல், இதுபோன்ற தீர்மானங்களை எடுக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...