முகக்கவசம் இனி அவசியமில்லை – அரசாங்கம்: அவசியம் என்கிறது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Date:

முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையுடன் தாம் உடன்படமாட்டோம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்துதெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா வைரஸ் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டில் வரப்படவில்லை. இன்றும் பல்வேறு நாடுகளில் மீண்டும் வைரஸ் தாக்கத்திற்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். இந் நிலையில்
கொரோனா தொற்றை ஒழிக்காமல், இதுபோன்ற தீர்மானங்களை எடுக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுமக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும், சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதும் அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...