விவசாயத்துறை அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறை ரத்து!

Date:

யூரியா உர விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய அமைச்சின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் ஜூலை 06 ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் ஜூலை 06ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

கையிருப்பில் உள்ள உரங்களை விவசாய மக்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (24) விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஷ்குமாரவிடம் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், யூரியா உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ள கமநல அபிவிருத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...