அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இராணுவ சிப்பாயிடமிருந்து திருடப்பட்ட துப்பாக்கி மீட்பு!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் கடந்த ஜுலை 13ஆம் திகதி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ சிப்பாயை தாக்கி T-56 துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (23) தியவன்னாவ பாலத்திற்கு அடியில் இருந்து கடற்படையின் சுழியோடிகள் துப்பாக்கி மற்றும் வெற்று மெகசின்களையும் மீட்டுள்ளனர்.

இதையடுத்து துப்பாக்கி மற்றும் வெற்று மகசீன் ஆகியவை வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...