அவசரகாலச் சட்ட விதிகள் குறித்த அறிவிப்பு!

Date:

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் அவசரகாலச் சட்ட விதிகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அவசரகாலச் சட்டங்கள் பொது அத்தியாவசிய சேவைகள், நுழைவு உரிமை, தேடுதல் மற்றும் கைது செய்யும் உரிமை, குற்றங்கள் மற்றும் தண்டனைகள், விசாரணைகள் மற்றும் சோதனைகள் மற்றும் இதர விபரங்கள் தொடர்பான ஏழு பகுதிகள் பிரகடனத்தில் விபரிக்கப்பட்டுள்ளன.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2வது பிரிவின் கீழ் இலங்கையில் நேற்று பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் நேற்று முதல் இலங்கை முழுவதும் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக இலங்கையில் பொது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கு சிறப்பாக பங்களிப்பு செய்து வரும் பஹன மீடியா- 7வது ஆண்டை கொண்டாடுகிறது.

மூத்த ஊடகவியலாளர் எம்.எஸ். அமீர் ஹூசைன் இலங்கை பல்லினங்களைக் கொண்ட ஒரு தேசமாகும். இந்த...

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் உதவி

இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது...

நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு

பஹன பப்ளிகேஷனின் 5வது வெளியீடாக வரும் “முஸ்லிம்களின் தேசத்துக்கான பங்களிப்புக்கள்” (අභිමානවත්...

வட மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை.

இன்றையதினம் (02) நாட்டின் வட மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள்...