இன்று நாட்டுக்கு வரவுள்ள மற்றொரு எரிவாயு கப்பல்!

Date:

எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளது.

லிட்ரோ நிறுவனம் அதன் எரிவாயு உள்ளடக்கம் சுமார் 3,700 மெட்ரிக் தொன்கள் என்று கூறியது.

கப்பல் இலங்கைக் கடற்கரையை வந்தடைந்ததன் பின்னர் தரச் சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிக்கைகளில் சிக்கல்கள் இல்லாவிட்டால் எரிவாயுக் களஞ்சியத்தை இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று இலங்கை வந்திறங்கிய கப்பலில் இருந்து தரையிறக்கப்பட்ட எரிவாயுவின் மற்றுமொரு பகுதி இன்று நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படவுள்ளது.

இதன்படி, 80,000 முதல் 90,000 வரையான உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் கொழும்பு மற்றும் வெளி மாகாணங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...