இன்று முதல் கொழும்பிற்கு எரிவாயு விநியோகம்: இன்று நாட்டுக்கு மற்றுமொரு எரிவாயு கப்பல்!

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகம் ஜூலை 11 திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது. புதிய விலை இப்போது 4910ரூபாவாகும்.

மேலும், மற்ற பகுதிகளுக்கு ஜூலை 13ஆம் திகதி எரிவாயு விநியோகம் செய்யப்படும்.

இதேவேளை பொதுமக்கள் சிலிண்டர்களை பதுக்கி வைப்பதில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் லிட்ரோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை மே மாதத்திற்கான மின்சார கட்டண பத்திரத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

3,700 மெட்ரிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நேற்று  வந்தடைந்தது. அதன்படி நேற்று பிற்பகல் முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...