கடந்த ஜுலை மாதம் 9ஆம் திகதி தனது வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அவரது வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
தனது வீடு எரியூட்டப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.
போராட்டத்திற்கு புறப்படும் மக்கள் தனது வீட்டை கடந்து செல்வதாக அன்றைய தினம் மாலை பொலிஸார் தமக்கு தெரிவித்ததாகவும் அவர்கள் அங்கு போராட்டம் நடத்தலாம் எனவும் அவர் கூறினார்கள்.
அதன் காரணமாக அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் அந்த கோரிக்கையை பரிசீலித்து தானும் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறியதாக பிரதமர் கூறினார்.
அதன் பின்னரே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் சரிந்ததால் தான் பிரதமர் பதவியை ஏற்றேன் என்றும் அவர் கூறினார்.