‘தாய் நாட்டை வழிநடத்த நாங்கள் தயார்’ :சஜித்

Date:

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் தாய்நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்க தயார் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் ஆணை முடிந்து விட்டதாகவும், நாட்டை அழித்து முடித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதை தவிர வேறு தீர்வு இல்லை என சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆணை முடிந்து விட்டது. அவர்கள் அனைவரும் சேர்ந்து இந்த அழகிய தாய் நாட்டை அழிப்பார்கள்.

நாட்டை ஸ்திரப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தலைமைத்துவத்தை வழங்கவும் எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

இதைத் தவிர மாற்றுத் தீர்வு இல்லை. இதை எதிர்க்கும் நாடாளுமன்றத்தில் யாரேனும் நாசகார செயலை செய்தால் அதை தேசத்துரோகமாக பார்க்கிறோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தாய்நாட்டைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தாய்நாட்டிற்கு தலைமையை கொடுங்கள்.நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்.

தாய்நாடு வெல்லட்டும், மக்கள் வெல்லட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...