எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவி: ஜனாதிபதிக்கும் புடினுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

Date:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிகவும் ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ள ஏரோஃப்ளோட் விமானச் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி உரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கு ரஷ்யா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் எரிபொருள் கொள்வனவுக்கான கடன் வசதியை வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...