எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவி: ஜனாதிபதிக்கும் புடினுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

Date:

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மிகவும் ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ள ஏரோஃப்ளோட் விமானச் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசி உரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட சவால்களை வெற்றிகொள்வதற்கு ரஷ்யா வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்ளும் வகையில் எரிபொருள் கொள்வனவுக்கான கடன் வசதியை வழங்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் கோரிக்கை விடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...