எரிபொருள் கிடைக்காவிட்டால் அம்பாறையில் நெற்செய்கை அழிவடையும் அபாயம்!

Date:

நெல் அறுவடைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு அடுத்த சில நாட்களுக்குள் கிடைக்காவிட்டால் அம்பாறை மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் நெற்பயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கு தேவையான எரிபொருளின் அளவு உரிய முறையில் கணக்கிட்டு பெற்றோலிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்க உரிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டிற்கு வந்துள்ள 40 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உர விநியோகம் இன்று ஜூலை 12 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடம் இருந்து சான்றிதழ் பெற்ற பின்னர் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு உரப் பொதி விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் செலவாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மேற்குறிப்பிட்ட உரப் பொதியானது 40,000 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனைக்கு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் மூலம் இலங்கைக்கு 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 40,000 மெற்றிக் தொன் உரம் கடந்த சனிக்கிழமை ஜூலை 9ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இவை நெல் மற்றும் சோளப் பயிர்களுக்குப் பயன்படுகிறது.

மேலும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய தேயிலை பயிர்ச்செய்கைக்காக எஞ்சிய உரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...